மாறி மாறி கூட்ட சொல்றாங்களே... 100 நாள் நீடிப்போமா? - குழம்பும் ஈபிஎஸ்
ஒரு பக்கம் சட்டசபை, மறுபக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் என மாறி மாறி கூட்ட சொல்வதால் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருக்கிறாராம்.
சென்னை: சட்டசபையை கூட்டச்சொல்லி ஒருபக்கம் திமுக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மறுபக்கம் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி அதிமுக எம்எல்ஏக்கள் 8 பேர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
எந்த நேரத்தில் முதல்வராக பதவியேற்றாரோ எடப்பாடி பழனிச்சாமி நித்தம் நித்தம் கண்டம்தான். எதிர்கட்சியினர் குடைச்சல், பங்காளிகள் ஓபிஎஸ் அணியின் நெருக்கடி மறுபக்கம் என மாறி மாறி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்.
இது போதாது என்று எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவு எம்எல்ஏக்களே அவருக்கு குடைச்சர் கொடுப்பதோடு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி 8 பேர் இன்று நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

சட்டசபையை கூட்டுங்க
பட்ஜெட் தாக்கல் செய்தததோடு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. இதனால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆட்சி கலைந்து விடுமா?
சட்டசபையை கூட்டினால் ஆட்சி கலைந்து விடும் என்ற அச்சத்தினாலேயே எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையை கூட்ட மறுப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

8 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
செந்தில் பாலஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் இன்று நேரடியாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியுள்ளனர்.

செங்கோட்டையனுடன் பேச்சு
தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த பின்பு தோப்பு வெங்கடாசலம் அணியினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறையில் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

அமைச்சர் பதவி
மாஜி அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது. அதோடு கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது இன எம்எல்ஏக்களே நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

100 நாள் நீடிப்பாரா?
எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று இன்னும் சில தினங்களில் 100 நாள் நிறைவடைய உள்ளது. எதிர்கட்சியினர் ஒருபக்கம், உட்கட்சி எம்எல்ஏக்கள் மறுபக்கம் என மாறி மாறி குடைச்சல் கொடுத்து வருவதால் 100 நாளை தாண்டுவோமா? என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications