காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி எம்.பி-க்கு கூரியர் மூலம் எலி மருந்து பார்சல்
பொள்ளாச்சி அதிமுக எம்பி வீட்டுக்கு எலிமருந்து பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் வீட்டுக்கு எலி மருந்து பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலைக்கு அதிமுக எம்பிக்கள் அனைவரும் தயார் எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த பேச்சு பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.
இது தமிழக விவசாயிகளிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தற்கொலை செய்யக்கோரி பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர் தமது தொகுதிக்குட்பட்ட எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications