எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியல.. முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் இருக்காங்க: தமிழிசை தாக்கு
எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோவை: எம்பி பதவியவே ராஜினாமா செய்ய முடியாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் மற்றும் துணை முதல்வர் உட்பட அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஒரு எம்பி கூட ராஜினாமா செய்ய மனம் வரவில்லை என்ற அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாக விமர்சித்தார். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தருவோம் என்றும் தமிழிசை கூறினார்.
காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் பெற்றுத்தராததை பாஜக பெற்றுத் தரும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சனையில் சட்டரீதியாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தமிழிசை கூறினார்.












Click it and Unblock the Notifications