"அம்மா"வின் ஆணைக்கிணங்க 111வது வட்ட வார்டு கவுன்சிலர் கற்பகம் ஏற்பாட்டின் பேரில்...!
சென்னை: வெயில் காலத்தையும் விடவில்லை அரசியல் கட்சியினர். ஆளாளுக்கு ஊர் ஊராக நீர்ப் பந்தல் வைத்து கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ஊர் முழுவதும் அதிமுகவினர் நீர்ப் பந்தல்களைத் திறந்து வைத்து வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி 111 வது வார்டு கவுன்சிலர் யு.கற்பகம் மற்றும் 110 வது கிழக்கு வட்ட செயலாளர் சாலை எம்.உமாபதி ஏற்பாட்டில் ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்பட்ட தண்ணீர் - நீர் மோர் பந்தலை அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்கல் அதிமுக பிரமுகர்கள் பெரும் திரளாக வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.
முதல் நாள் என்பதால் இளநீர், வெள்ளரிக்காய், ஜில் ஜில் மோர் என டேபிள் முழுவதும் நிரம்பி வழிந்தது.. நாளைக்கும் வெள்ளரிப் பிஞ்சு கொடுப்பார்களா என்று தெரியவில்லை!












Click it and Unblock the Notifications