மோடி-ஜெ. சந்திப்பு பற்றி விமர்சனம்... ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருவபொம்மை எரித்து அதிமுக. ஆர்ப்பாட்டம்
நெல்லை : பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை சர்ச்சைக்குரிய வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் பேசியதை கண்டித்து அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தென்காசி அருகேயுள்ள இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதோபோன்று, திண்டிவனத்தில் அதிமுக சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து திண்டிவனம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.ஜெயபிரகாஷ் தலைமையில் ஈ.வே.கே.எஸ்சின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கக்கட்டது.
அண்மையில், நெசவாளர் தின விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சி முடிந்த பின்னர், முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பா.ஜ.க மற்றும், அ.தி.மு.க. வினர் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.