காவிரி விவகாரம்: ஏப்.25 முதல் 29 வரை டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுக்கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொது கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழகத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசியல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது. மே 3 ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

நாடாளுமன்றத்தை அதிமுகவினர் முடக்கியதோடு போராட்டம் நடத்தினர், அப்போது பேசிய தம்பித்துரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராடுவோம் என்று கூறினார்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர். முழுஅடைப்பு, ஆர்பாட்டம் நடத்தி வந்த திமுக, தோழமை கட்சியினர், வரும் 23ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொது கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை:
ஏப்ரல் 25ஆம் தேதி நாகை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏப்ரல் 26ஆம் தேதி தஞ்சாவூர், 27ஆம் தேதி திருச்சி, மற்றும் 28ஆம் தேதி திருவாரூர், கரூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 29ஆம் தேதி கடலூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாகையில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.மணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அரியலூர், பெரம்பலூரில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், ராஜேந்திரன், ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்றும், தஞ்சையில் ஆர்.வைத்திலிங்கம், தங்கமணி, துரைக்கண்ணு தலைமையில் 26ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை வெளிப்படையாக எதிர்க்க தயாராகிவிட்டது அதிமுக.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications