கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே அதிமுக ஆட்சியின் சாதனை... வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே மிச்சம். அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து விட்டது. ஊழல் நிறைந்துள்ளது. இதுதான் அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனையாகும். அதில் கடந்த 6 மாதமாக அரசு எந்திரமே செயல்படவில்லை. தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

ADMK rule is famed with corruotion and law and order issues, says Vaiko

மே 17, 18 தினம் என்பது தமிழர்களுக்கு கொலை நடுங்க வைத்த நாள். இலங்கை தமிழர்கள் படுகொலையில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை தான் பாரதீய ஜனதா அரசும் பின்பற்றுகிறது. இதில் பாரதீய ஜனதா அரசு மக்களை வஞ்சித்து விட்டது. ஈழத் தமிழர்கள் முதுகில் பாரதீய ஜனதா குத்துகிறது.

பெட்ரோல்-டீசல் விலையை இரண்டு வாரத்தில் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதற்கான முழு பலனையும் எண்ணெய் நிறுவனங்கள் பெறுகின்றன.

அதே சமயத்தில் விலை உயரும் போது அதன் சுமை மக்கள் மீது விழுகிறது. விலைவாசி உயர்வதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சியின் 1 ஆண்டு வெகுமதி பெட்ரோல்-டீசல் விலை உயர்வாகும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+