அதிமுகவின் இரு அணிகளும் இணையவே இணையாது.... அடித்துச் சொன்ன ஓபிஎஸ்: வீடியோ
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவின் இரு அணிகளும் இணையவே இணையது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது தொண்டர்களுக்கு கவலையை எற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அதிகார மோதலில் சசி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு அதிமுக தினகரன் அணி, எடப்பாடி அணி, ஒபிஎஸ் அணி என மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளது. இவற்றுக்கிடையில் தீபாவும் அவரது கணவர் மாதவனும் இரு குரூப்பாக பிரிந்து அதிமுகவுக்கு நாங்கள் தான் வாரிசு என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் விரைவில் இணையும் என கடந்த ஒன்றரை மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இரு அணிகளும் பேச்சு வார்த்தைக்கென்று குழு அமைத்தன. அதனால் இரு அணிகளும் இணைந்துவிடும் என அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இரு அணிகளுக்கும் இடையில் என்ன காரணத்தினாலோ இணைப்பு இழுவையாக இருந்த நிலையில், தற்போது ஒபிஎஸ், உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடையே, இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications