நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. சசிகலா அதிமுக அவசர அழைப்பு!
அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னைக்கு வர வேண்டும் அதிமுகவின் சசிகலா அணி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அனைத்து மாவட்ட செயலாளர்கள் நாளைக்கு சென்னைக்கு வர வேண்டும் என அதிமுகவின் சசிகலா அணி அவசர அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட செயலளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சி தனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட சசிகலா தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார்.

அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இதுவரை சசிகலா குடும்பத்துடன் ஒட்டிஉறவாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அதிமுக தற்போது டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை சென்னை வர சசிகலா தரப்பு அவசர அழைப்பு விடுத்துள்ளது. நாளை தலைமைக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
துணைப்பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் தலைமையில் முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications