துணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்.. வெங்கையா நாயுடு
சென்னை: துணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கவர்னரை நட்பு ரீதியாகவே சந்தித்து பேசினேன். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்குதான் நேற்று நான் வந்தேன்.
ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பற்றி வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகள் நல்லதல்ல.
பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பதைப் பற்றி தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை காத்திருப்போம்.
தமிழக முதல்வர் மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர். அவர் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications