ஜெயலலிதா மறைவுக்கு துக்கம்- மொட்டை போட்டு கதறி அழுத பெண்கள் #Jayalalithaa
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆண் தொண்டர்கள் மட்டுமல்லாது பெண்களும் மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை மெரினா கடற்கடையில் உள்ள எம்ஜியார் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, உள்ளே யாரும் நெருங்கமுடியவில்லை.
விடிய விடிய தொண்டர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் படுத்து உறங்கினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்க்க பொது மக்கள் இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

மொட்டை போட்டு அஞ்சலி
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் தலைமையில் 60 பேர் இன்று காலை 8.30 மணியளவில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வணங்கினார்கள். அதன்பிறகு சமாதிக்கு இடதுபுறம் அமர்ந்து மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தினார்கள்.

ஈடு செய்ய முடியாத இழப்பு
புரட்சி தலைவி அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழகமே துயரத்தில் இருக்கும் போது எங்களாலும் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினோம் என்று தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.
Chennai: A Woman gets her head tonsured as a mark of respect for #Jayalalithaa pic.twitter.com/oc0mpQW8kF
— ANI (@ANI_news) December 7, 2016
பெண்கள் மொட்டை போட்டு அஞ்சலி
அம்மாவின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது ஆண்கள் , பெண்கள் என தீவிர தொண்டர்கள் மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
நேரம் ஆக ஆக இங்கு சென்று அஞ்சலி செலுத்துவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏராளமான பெண்கள் கண்ணீர் மல்க அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications