தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு எதிராக... ஹைகோர்ட்டில் மனு
தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடுத்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பொதுமக்களும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நேற்று முதல் இணையதள சேவை நிறுத்தப்பட்டது.
இணையதள சேவையை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications