நாகர்கோவில் நீதிமன்ற மோதல் வழக்கு: ரத்து செய்ய விஜயகாந்த் மனு!

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
மதுரை: நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி நான் ஆஜரானேன். அப்போது தே.மு.தி.க. வழக்கறிஞர்களிடம் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். இந்த வழக்கு அரசு வழக்கறிஞர் ஞானசேகர் தூண்டுதலின் பேரிலேயே போடப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடனேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை தடை செய்வதுடன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+