21 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் குண்டுவெடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் தீவிரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போதும் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியன்று சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகி இருந்தனர்.

After 21 years bomb blast in Chennai

அதன் பின்னர் கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புதான் மிகப் பெரியது. இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம். இதில் 52 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் பலியாகி இருக்கிறார்.

சென்னை நகருக்கு தீவிரவாதிகள் இலக்கு வைத்து இருப்பதாக பல முறை உளவுத்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+