For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.. சாத்தூர் நீதிமன்றம் அதிரடி!

பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாத்தூர் கோர்ட்டில் நிர்மலா தேவியை ஆஜர்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்

    விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    After 5 daya custody Nirmala devi appeared in the Sattur court today

    இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விருதுநகர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

    இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர்கள் பலருக்கு தொடர்பிருப்பதும் அம்பலமானது.

    இந்நிலையில் 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவிக்கு மீண்டும் காவல் விதித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    English summary
    Judicial custody till May 9 for Professor Nirmaladevi. After 5 daya custody Nirmala devi appeared in the Sattur court today. Nirmala devi was in CBCID custody for 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X