நிபந்தனை நிறைவேறினால்… நெக்ஸ்ட் செகண்ட்… சேர்ந்திடுவோம்… ஓபிஎஸ் உறுதி
நிபந்தனைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். நிபந்தனைகள் நிறைவேறினால் அடுத்த வினாடி இரு அணிகளும் இணைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகள் நிறைவேறினால் அடுத்த வினாடியே பிரிந்துள்ள இரு அணிகளும் இணைந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துவிட்டு ஓபிஎஸ் சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் அனைவருடன் கலந்து பேசி அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

மோடி சந்திப்பு
தமிழக மக்களின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவாக கொடுத்து உள்ளோம். இவற்றை கவனமாக கேட்ட பிரதமர் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த வினாடி
இரு அணிகளின் இணைப்பைப் பொருத்தவரை, சில கோரிக்கைகளை முன் வைத்து உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். நிபந்தனைகள் நிறைவேற்றினால் அடுத்த வினாடியே சேர்ந்துவிடுவோம் என்று ஓபிஎஸ் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்
முன்னதாக, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.

தர்மயுத்தம்
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலும் அகற்றும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஓபிஎஸ் தொடர்ந்து ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். டெல்லி சென்றும் அவர்களுக்கு எதிராகவே பிரதமரின் சந்திப்பின் போதும் பேசப்பட்டதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications