இடைத் தேர்தலில் ட்ராபிக் ராமசாமிக்கு ஆதரவா?… ஆலோசித்து முடிவு என கருணாநிதி பேட்டி….
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ட்ராபிக் ராமசாமியை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி போட்டியிடுகிறார்.
தி.மு.க., பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன.

இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினை சந்தித்த ட்ராபிக் ராமசாமி, பொதுவேட்பாளராக தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்த ட்ராபிக் ராமசாமி இதே கோரிக்கையை விடுத்தார்.
பின்னர் மாலையில் கருணாநிதியை சந்தித்த ட்ராபிக் ராமசாமி, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விட்டு ட்ராபிக் ராமசாமிக்கு ஆதரவு குறித்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications