தொடரும் அதிரடி.. திண்டுக்கல் அதிமுக ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்தி கைது.. ஸ்டேஷன் முற்றுகை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்திக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையே பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கீழ்மாத்தினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). திமுக பிரமுகர். இவர் நேற்று இரவில் வேடசந்தூர் ஆத்துமேடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சுத்துப்போட்டது.
இதையடுத்து அந்த கும்பல் அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் கவுதமை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றது.

இதில் காயமடைந்த கவுதம் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து கவுதம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கவுதமை தாக்கியதாக ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (24), பெரியசாமி (23), கண்ணன் (20), சக்திவேல் (20) மற்றும் சேட்டை கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் சேட்டை கார்த்திக் என்பவர் அதிமுக ஐடி விங்க்கின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஆவார். மேலும் கடந்த ஆட்சியில் சேட்டை கார்த்திக் மற்றும் கவுதம் இடையே பார் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விரோதத்தில் தான் கவுதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதான 5 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது சேட்டை கார்த்திக் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு மட்டுமின்றி வேடசந்தூர் நகர அதிமுக செயலாளர் பாபுசேட், மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளர் மாரம்பாடி போஸ் மற்றும் அதிமுகவினர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications