எடுத்துக் கொடுத்த இளங்கோவன்.. பிடித்துக் கொண்ட விஜயகாந்த்.. மாட்டிக் கொண்ட ஜெ.!
அரியலூர்: தேர்தல் நேரத்தில் தவறாமல் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் அவர் எந்த ஒரு திட்டத்திற்காவது எம்.ஜி.ஆரின் பெயரை வைத்திருப்பாரா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அரியலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் ராமஜெயவேல் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

எம்.ஜி.ஆர்.
தேர்தல் நேரத்தில் தவறாமல் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் அவர் எந்த ஒரு திட்டத்திற்காவது எம்.ஜி.ஆரின் பெயரை வைத்திருப்பாரா? இல்லையே.

உளவு
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்-மக்கள் நலக் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இதனால் அதிமுகவும், திமுகவும் தங்களின் உளவுத் துறை மூலம் எங்களை கண்காணித்து வருகின்றன.

ரவுடிகள் ராஜ்ஜியம்
எங்களுக்கு எந்த உளவுத் துறையும் இல்லை. மக்களும், தொண்டர்களுமே எங்கள் கூட்டணியின் உளவுத் துறை. தமிழகத்தில் தற்போது ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊழல்
அதிமுகவும் சரி, திமுகவும் சரி மக்களை பற்றி நினைப்பதே கிடையாது. அந்த இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் செய்துள்ளன என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்
தேர்தலுக்கு தேர்தல் தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் வரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் தெரிவித்திருந்தார். அவர் எடுத்துக் கொடுத்த எம்.ஐி.ஆர். பாயிண்ட்டை கேப்டன் பிடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications