ஜியோ வந்தாலும் வந்தது.. ஏர்டெல்லை இப்படி கலாய்க்கிறாங்களே
சென்னை: பல வருடங்களாகச் சிறந்த டெலிகாம் சேவை அளிப்பதாகக் கூறி மக்களிடம் அதிகப் பணத்தை வசூல் செய்து, தனது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்ட ஏர்டெல் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய போட்டி என்று சொன்னால் மிகையாகாது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் அளவிற்கும், அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் மிகப்பெரிய திட்டத்துடன் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நேற்று சந்தையில் அதிகாரப்பூர்வமாக இறங்கியுள்ளது.
ஏர்டெல் பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்தன. இதை பார்த்து ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பலரும் வயிற்றெரிச்சலை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இதற்கு காரணம், ஏர்டெல் அவ்வப்போது ரீசார்ஜ் பணத்தை எடுத்துவிடுவதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான்.
இதோ பாருங்கள் அவர்கள் கருத்துக்களை:

போதும்மா..
ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு ஏர்டெல் கஸ்டமர் ரியாக்சன் என்று கூறி, சட்டசபை தேர்தலில் திமுக வெளியிட்ட, போதும்மா.. விளம்பரத்தை பேஸ்புக்கில் போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஜியோடா..
கபாலி டயலாக்கை உல்டா செய்து ரியோடா என்று சொல்கிறது இந்த டிவிட்
|
வாழ்ந்து கெட்டது
நோக்கியாவை போலவே ஏர்டெல்லும் தனது பெருமையை இழக்கப்போகிறது என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
எச்சரிக்கை
இவரு ஜியோ மேல சந்தேகப்படும் நெட்டிசன்போலும். எப்படியும் jio கால வாருவாங்க ... மறுபடியும் ஏர்டெல் கிட்ட வழிஞ்சிக்கிட்டே வந்து நீக்க போறாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
கஸ்டமர்கி்ட்டதான்
ஏர்டெல் பங்கு சரிஞ்சிருச்சுனு ரொம்ப சந்தோசப்படாதீங்க டா.. அது இதுனு கடைசியில உங்க கிட்டதான் காசு புடுங்குவாங்க என்கிறது இந்த டிவிட்.

ஏர்டெல்தான் குறி
"ஜியோ நெட்டு ஸ்பீடா இருக்கோ இல்லையோ... எனக்கு இந்த ஏர்டெல் காரன் நாசமா போனா சரி..." என்கிறார் இந்த நெட்டிசன்












Click it and Unblock the Notifications