பெட்ரோல், டீசல் விலை பயங்கர உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களை சுட்டிக்காட்டி தப்பி ஓடும் மோடி அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலையற்ற இந்த விலை உயர்வு ஏற்ற இறக்கங்கள் ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக பாதிக்கவே செய்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வதில்லை.

இந்தியாவில் மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிர்ணயம் செய்து வந்தன. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திப்பதாகக் கூறி மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது.,

இதன் மூலமே பெட்ரோல், டீசல் விலையை மாதம் 2 முறை மாற்றி அமைக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.. இப்படி செய்துவிட்டதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற எதிர்க்கட்சிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து மிக இலகுவாக தம்மை தற்காத்துக் கொள்கிறது மத்திய அரசு.

சொற்ப காசு குறைவு

சொற்ப காசு குறைவு

கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த பிப்ரவரி 1-ந் தேதி வரை பெட்ரோல் விலை 10 முறை குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 50 காசு, 35 காசு என்ற அளவில்..தான் இதேபோல் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2015 பிப்ரவரி 1-ந் தேதி வரை டீசல் விலை 6 முறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 11 காசும், டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 96 காசும் குறைந்தது.

ரூபாய் கணக்கில் அதிகரிப்பு

ரூபாய் கணக்கில் அதிகரிப்பு

இதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை ரூ8 மற்றும் ரூ6 ஆக உயர்ந்தது. இப்படி சில்லறையாக அதாவது 50 காசு, 40 காசு அளவுக்கு விலை குறைப்பு என அறிவிப்பு வரும்.. அதன் பின்னாலேயே ரூ4 அதிகரிப்பு எனவும் அறிவிப்பும் வரும்..

ஒதுங்கும் மத்திய அரசு

ஒதுங்கும் மத்திய அரசு

இத்தகைய குழப்பமான நிலையைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை.. எண்ணெய் நிறுவனங்கள் பாடு... பொதுமக்களின் பாடு என ஒதுங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு..

பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அடிப்படை தேவைகளில் முதன்மையானதும் கூட.. இவற்றின் விலை ஏற்றம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே பல முனைகளில் இருந்தும் தாக்கக் கூடியது.

அதிகாரத்தை திரும்பப் பெறுக!

அதிகாரத்தை திரும்பப் பெறுக!

இந்த விலையை கட்டுப்படுத்தி பொதுமக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்துவதுதான் ஒரு மத்திய அரசின் கடமையே தவிர.. எனக்கு ஒன்றும் தெரியாது.. எண்ணெய் நிறுவனங்கள்தான் பொறுப்பு என தட்டிக் கழித்து ஓடிப் பம்மிக் கொள்வது 'பொறுப்புள்ள' ஒரு அரசுக்கு அழகல்ல மிஸ்டர் மோடி சர்க்காரே!!

இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெற்று மத்திய அரசே தம் வைத்துக் கொள்ள வேண்டும் என குரல் எழுப்புகின்றன. செவிசாய்க்கு டெல்லி பேரரசு?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+