தி சென்னை சில்க்ஸ்: இடிக்கும் பகுதியில் மீண்டும் தீ விபத்து.. இடிப்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்!
சென்னை சில்க்ஸ் கட்டத்தை இடிக்கும் பகுதியில் மீண்டும் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸின் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 6 மற்றும் 7வது தளங்களில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து 2 நாட்களுக்குப் பிறகு அணைக்கப்பட்டதை தொடர்ந்து நவீன கருவிகள் கொண்டு சேதமடைந்த இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஜா கட்டர் கருவிகள் மேலிருந்து கீழாக கட்டடத்தை துண்டு துண்டாக இடித்து வருகின்றன. இந்நிலையில் ஜா கட்டர் கருவிகள் இடிக்கும் 6 மற்றும் 7வது தளத்தில் திடீர் தீ விபத்து எற்பட்டுள்ளது.
இதனால் கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரபு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications