அமைச்சர்கள் போயஸ் கார்டனில்.. அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ் வீட்டில்.. அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், சசிகலாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பினால் தானே முதல்வராக தொடருவேன் என்று தெரிவித்தார்.

இதனால் அதிமுக தொண்டர்களுக்கு புது உற்சாகம் ஏற்பட்டது. சசிகலா முதல்வராவதை எதிர்த்து வந்த அதிமுக தொண்டர்கள் தங்களது ஆர்வத்தால் முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டு முன்பு குவிந்தனர். பெண்களும் வந்து ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர் வழியில் பொறுப்பாக ஆட்சி நடத்தியது ஓ.பி.எஸ்தான் என தொண்டர்கள் பலரும் டிவி சேனல்களுக்கு பேட்டியளித்தபடி உள்ளனர்.
அதேநேரம், அமைச்சர்களும், கட்சி பதவியில் இருப்பவர்களும் மட்டும் சசிகலா வசிக்கும் போயஸ் இல்லத்திற்கு சென்றனர். அதிமுக அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும், அமைச்சரின் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications