வீடியோவில் சிக்கிய சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுகுமாருக்கு ஜெ. கல்தா! 6 எம்.பிக்களுக்கு சீட் மறுப்பு!

லோக்சபா தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.
இந்த பட்டியலில் தற்போதைய எம்.பிக்களான தம்பிதுரை, குமார், வேணுகோபால் ஆகியோருக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆனந்தன், மயிலாடுதுறை ஓ.எஸ். மணியன், தென்சென்னை சிட்லபாக்கம் ராஜேந்திரன், சேலம் செம்மலை, திருப்பூர் சிவசாமி, பொள்ளாச்சி சுகுமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவர்களில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பொள்ளாச்சி சுகுமார் ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு முன்பின் தெரியாதவர்களுக்கெல்லாம் பரிந்துரை கடிதங்களை தாராளமாக வழங்கினர் என்ற புகாருக்குள்ளானவர்கள். இவர்கள் பணம் பெற்றுக் கொண்டு பரிந்துரை கடிதம் தரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனாலேயே இவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதேபோல் மற்ற 4 எம்.பிக்களின் நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஜெயலலிதா அதிருப்தி அடைந்த காரணத்தால்தான் அவர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications