"மின்வெட்டு இல்லாத" மாநிலமாக்கிய முதல்வர் ஜெ.க்கு நன்றி- அதிமுக செயற்குழுவில் தீர்மானம்!!
சென்னை: தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டைப் போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் லோக்ச்பா தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் 9 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மறைந்த 137 அதிமுகவினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அதிமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்றும் உலகம் போற்றும் அம்மா உணவகம் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு நன்றி தெரிவித்தும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் அம்மா உப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும் அதிமுக செயற்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டை போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானமும், முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்களில் கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications