Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளத் தொடர்பு, சேடிஸ்ட்.. முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மீது மனைவி சரமாரி குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செந்தமிழனிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் செந்தமிழனின் மனைவி லட்சுமி (வயது 43) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு 4.4.94 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் செந்தமிழனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதுபற்றி கேட்டபோது, அந்தப் பெண் மூலம் ஆள்வைத்து என்னை தாக்கினர். செந்தமிழன் மது அருந்திவிட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு துன்பம் ஏற்படுத்துகிறார். மற்றவர் துன்பத்தில் மகிழும் சேடிஸ்ட் போல செயல்படுகிறார்.

அவருடன் வாழமுடியாமல் நானும் குழந்தைகளும் தனியாக வசிக்கிறோம். அவருடன் வாழ்வது சிரமமாக உள்ளது. எனவே செந்தமிழனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ஜூலை 14-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை 2-வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் லட்சுமி மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கும், எனது 2 குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக ரூ.1.50 லட்சத்தை வழங்க செந்தமிழனுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+