Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஸ் கேட்டு மாட்டிக்கொண்ட வேலுமணி.. இன்று CSK ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த அதிமுக மாஜிக்களை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் நேற்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியபோது, "அதிமுக ஆட்சியில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

Aiadmk ex ministers watching csk vs rr ipl cricket match today

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்கு பாஸ் கொடுத்தீங்கனு தெரியல.. சென்னையில் மேட்ச் நடக்கும்போதெல்லாம் என் தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் 150 பேரை என் சொந்த செலவில் டிக்கெட் வாங்கி போட்டியைக் காண வைக்கிறேன்" என்றார்.

மேலும், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ . உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் அதன் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தரமாட்டார். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்." என்று உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடி தெரிவித்தார். உதயநிதியின் இந்தப் பேச்சால் முதல்வர் உட்பட சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டு ரசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த செலவில் டிக்கெட் பெற்றே இன்றைய போட்டியைக் காண வந்திருப்பதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+