”அம்மா” இடத்தில் வளர்மதி: இடைத் தேர்தலுக்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்!
திருச்சி: அதிமுகவின் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரான வளர்மதி, தன்னுடைய கவுன்சிலர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி அறிவிக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அதிமுகவின் வேட்பாளராக சீ. வளர்மதி நிறுத்தப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தனது பதவியை இழந்தார். அதனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து வளர்மதி தனது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று மேயர் ஜெயாவிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications