வேட்பாளரை மாற்ற வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பாளையங்கோட்டை அதிமுகவினர்
நெல்லை: பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேனை மாற்ற கோரி போஸ்டர் ஓட்டப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள புலிமாங்குளம். தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவர் உருது மொழி பேசக் கூடியவர் என்பதால் மேலப்பாளையம் முஸ்லிம் ஓட்டுகள் இவருக்கு கிடைக்காது என்றும், இதனால் நெல்லை பாளையை சேர்ந்த ஒருவரை அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மகன் உசேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவருடன் பிரசாரத்துக்கு செல்லாமல் நெல்லை தொகுதிக்கு சென்று விட்டனர். இதுகுறித்து தமிழ்மகன் உசேன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசினார்.
இந்நிலையில் அவரை மாற்ற கோரி நெல்லை கலெக்டர் அலுவலகவளாகம் மற்றும் பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. அதில் தனி மனித வாழ்க்கையில் ஓழக்கமற்ற தமிழ்மகன் உசேனை மாற்றினால் பாளையங்கோட்டை ஜெயலலிதா கோட்டையாகும்.
வெளியூர் வேட்பாளரை மாற்றி உள்ளூர் வேட்பாளரை அறிவித்தால் அம்மாவுக்கே வெற்றி என குறி்ப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்மகன் உசேன் வட்டாரம் கிடுகிடுத்து கிடக்கிறது.












Click it and Unblock the Notifications