நாமக்கல்: அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை- ஒருவர் கைது
சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல்: சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி. சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விமல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். இவர் ஜெ பேரவை ஒன்றிய செயலாளராகவும், வெட்டுக்காடு தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி மல்லிகா, 42. இவர் உத்திரகிடிகாவல் ஊராட்சி முன்னாள் தலைவராவார்.

ரியல் எஸ்டேட் தொழில் தொழில் செய்து வந்த சுரேஷ் நிலம் வாங்கி விற்பதில் பலரிடம் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு 10 மணியளவில் வெட்டுகாடு பஸ் ஸ்டாப் பகுதிக்கு சென்ற சுரேஷ், அங்குள்ள டீக்கடை முன் காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார்.
அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சுற்றி வளைத்து வெட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில், நடந்த இந்த சம்பவத்தால் சுரேஷ் நிலை குலைந்தார். அவரது தலை துண்டானது.
தலை துண்டாகிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிர் போகும் வரை காத்திருந்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ வந்த பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், சுரேஷின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டுக்காடு பகுதியில் நிலம் வாங்கியது தொடர்பாக சுரேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், கொலை நடந்ததா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
5 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மலைவேப்பம்குட்டையை சேர்ந்த விமல் குமார் என்பவரை போலீசார் கைது செய்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications