For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. தினகரன் திடீர் பேச்சு

உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருநின்றவூரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறந்து வைத்தார்.

AIADMK General Secretary Election very soon, ttv Dinakaran

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தினகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவியை பெற்றவர்களே அதிமுகவை அழிக்க துடிக்கிறார்கள். கட்சியில் இருந்து சிலர் விலகி விட்டதால் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பொதுச்செயலாளருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் 10 பேர் மனு கொடுத்துவிட்டால் அவர்கள் அதிமுக ஆகிவிட முடியாது. அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதிமுகவின் ஆட்சி என்றென்றும் நிலைக்க ஒற்றுமையுடன் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
AIADMK Duputy General secretary ttv Dinakaran has said, party General secretary election for very soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X