அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்கிறேன்... சபாநாயகர் தனபால் திட்டவட்டம்
அதிமுக ஆட்சி நீடித்து நிற்கும் என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்கிறேன் என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் தனபால், அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா வழியில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இவர்களில் 19 பேருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர்.
அதேநேரத்தில் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என திவாகரன் தரப்பு முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக அரசு தொடரும் என சபாநாயகர் தனபால் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications