பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் அதிமுக பிரமுகர் குத்திக்கொலை.. தொடரும் கொலையால் மக்கள் பீதி
தூத்துக்குடி அருகே பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் அதிமக பிரமுகர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட அதிமுக பிரமுகர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னவேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் செல்வாக்குப் பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த முனியசாமி. இவர் இன்று விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.

இதனைக் கண்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் முனியசாமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் முன்பகை காரணமாக முனியசாமி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல்மாந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னவேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் தொடரும் கொலைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications