திண்டுக்கல்லில் ஸ்டாலின் பேனர் கிழிப்பு: அதிமுக – திமுக மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நீதிமன்றம் அருகே விளம்பர போர்டு வைப்பது தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. வக்கீல்கள் மற்றும் கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு கட்சியை சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் பதட்டம் நிலவி வருகிறது
தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் 25.11.2013 அன்று மு.க.ஸ்டாலின் ஆஜராவதினால், அதற்காக தி.மு. கழக வழக்கறிஞர்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்க, முறையான முன் அனுமதி பெற்று, வரவேற்பு பேனர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க.வைச் சார்ந்த வழக்கறிஞர்கள் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் கடந்த 21-ந்தேதி அ.தி.மு.க. பேனர்களை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
அப்போது சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பாரதி முருகன் நீதிமன்ற வாயிலில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் வரவேற்பு பேனர்களையும் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கும், 25-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் காயம் ஏற்பட்டது.
மோதல் காரணமாக பதற்றம் உருவானதால் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க. தரப்பில் இளைஞர் பாசறை துணைத்தலைவர் முருகபாண்டியன் புகாரின்பேரில் தி.மு.க. வக்கீல்கள் தேவராஜன், சுரேஷ்குமார், கிருஷ்ணன், சூசைராபர்ட், அன்பழகன், சாதிக், மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன், கவுன்சிலர்கள் ராஜப்பா, மார்த்தாண்டன் உள்பட 211 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. வக்கீல் சுரேஷ்குமார் புகாரின் பேரில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாரதிமுருகன், கவுன்சிலர் சோனா சுருளி, உறுப்பினர்கள் சின்னு, வேல்முருகன் உள்பட 204 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications