காஷ்மீர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பளத்தை அளிக்க புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் 170க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இது குறித்து புதுச்சேரி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ. அன்பழகன் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் வெள்ள நிலைமையை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
எம்.எல்.ஏ.க்களின் இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications