அதிமுக ஒற்றுமையாக உள்ளது.. பி.ஹெச்.பாண்டியன் குழப்பம் செய்கிறார்: பண்ருட்டி ராமச்சந்திரன்
அனைவரும் ஒற்றுமையாக சசிகலாவை முதல்வராக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதிமுக ஒற்றுமையாக இருப்பதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நிருபர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:

ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள்தான் சசிகலாவிடம் கேட்டுக்கொண்டோம். அவர்கள் ஒப்புக்கொண்டார். ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை கொடுத்து பதவி பிரமாணம் செய்ய வேண்டியதுதான் இனி நடைபெற வேண்டியதாகும். அதிமுகவினர் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் உள்ளதை எல்லோரும் நன்கு அறிவார்கள். இந்த சூழலில் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் பி.ஹெச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும். அவர்களுக்கு பிரச்சினை இருந்தால் கட்சிக்குள்தான் பேசியிருக்க வேண்டும். என் போன்றோரிடமாவது பேசியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications