திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு அப்ளிகேசன் போடும் அதிமுகவினர்... சீட் கிடைக்க கருணை காட்டுவாரா?
சென்னை: அதிமுகவில் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்களிடம் 10 நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. கட்சித்தலைமையிடம் இருந்து அழைப்பு வந்த உடனேயே சீட் கிடைத்த சந்தோசத்தில் திளைக்கும் பலரும் சென்னையில் இறங்கிய கையோடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசித்து ஒரு அப்ளிகேசனை போட்டு வைக்கின்றனராம்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சிகள் மும்முரமாக உள்ளன.
கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆளும் அதிமுக முகாமில் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இம்முறை நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்.
சென்னையில் தொடங்கி குமரி வரைக்கும் 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு கொடுத்தவர்களில் தொகுதிக்கு 3 பேர் வீதம் அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்ப மனுத்தாக்கல் செய்தவர்களுக்கான முதல்கட்ட நேர்காணல் கடந்த 6ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட நேர்காணல் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.

பார்த்தசாரதி கோவில்
ஜெயலலிதாவை சந்திக்க வந்து காத்துக்கிடப்பவர்களில் பெரும்பாலானோர் திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக இருக்கிறது பார்த்தசாரதி கோவில் வளாகம்.

9வதுநாள் நேர்காணல்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று நேர்காணல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விருப்பமனு கொடுத்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

10வது நாளாக நேர்காணல்
எம்.எல்.ஏ சீட் கேட்டு விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று 10வது நாளாக நேர்காணல் போயஸ்கார்டனில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.

களை கட்டும் போயஸ் கார்டன்
கடந்த பத்து நாட்களாக நேர்காணல் நடைபெறுவதால் போயஸ் கார்டன் உள்ள சாலை அதிமுகவினரால் நிரம்பி வழிகிறது. ஆங்காங்கே சிறு கடைகளும் முளைத்து வியாபாரமும் களை கட்டி வருகிறதாம்.

செக்போஸ்ட்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருப்பவர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பெயர் உள்ளவர்களை மட்டும்தான் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளேயே நுழைய முடிகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடாம். ஆனாலும் சில தொண்டர்கள் உற்சாக மிகுதியில் போயஸ் கார்டன் சாலைக்குள் புகுந்து விடுகிறார்களாம்.

செல்போனுக்கு அனுமதியில்லை
வேதா நிலையத்திற்குள் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படும் நபர்கள் முதலில், செல்போனைக் கீழே உள்ள அறையில் வைத்துவிட வேண்டும். கையில் எந்த பேப்பரையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு நபரிடமும், இரண்டு நிமிடங்கள் முதல் நான்கு நிமிடங்கள் வரைதான் நேர்காணல் நடைபெறுகிறது.

கேள்விகள் என்னென்ன?
என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?... உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?... எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற கேள்விகளைத்தான் பெரும்பாலோரிடம் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

அக்கறையோடு விசாரணை
60 வயதைத் தாண்டியவர்களிடம், உங்கள் உடம்பு எப்படி உள்ளது? பீ.பி இருக்கிறதா உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையோடு விசாரணை நடத்தும் ஜெயலலிதா, குட் லக், டோன்ட்வொர்ரி, அம்மா பார்த்துக்கிறேன்... என்று சொல்லி அனுப்புகிறாராம்.
யார் யாருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்குமோ? எல்லாம் அந்த பார்த்தசாரதி கையில் இருக்கிறது என்கின்றனர் இண்டர்வியூவிற்கு சென்று வந்தவர்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications