நரேந்திர மோடியை சந்தித்து அரசியலில் குதிக்கும் அஜீத்?
சென்னை: நடிகர் அஜீத் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் அரசியலில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜீத். தற்போதைய சூழ்நிலையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் கூட அஜீத் கலந்து கொள்வதில்லை.
நிலைமை இப்படி இருக்க பிரதமர் நரேந்திர மோடியை அஜீத் விரைவில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வலுப்படுத்த நடிகர் ரஜினியை பலமுறை சந்தித்தும் அவர் பிடிகொடுக்கவில்லை என்பதால் கட்சி தரப்பில் அஜித்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் இது தொடர்பாக பாஜக மற்றும் அஜீத் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரசிகர் மன்றங்களையே அஜீத் துணிந்து கலைத்தவர் என்பதால் இவர்கள் இருவரின் சந்திப்பு நிகழ்ந்தால் அஜீத் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்று அறிய அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications