குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கும்பகோணம் அகிலாவின் உடல் ஒப்படைப்பு
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கும்கோணத்தை சேர்ந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேனி: குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கும்கோணத்தை சேர்ந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பக்கப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த அகிலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் சென்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.