போலீசுக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 அல் உம்மா கைதிகள்.. சேலம், வேலூர், கடலூருக்கு மாற்றம்
சென்னை: செல்போனில் பேசியதை கண்டித்த போலீஸ்காரரை தாக்கிய அல் உம்மா கைதிகள் 9 பேர் வேலூர், சேலம், கடலூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
புழல் சிறையில் தண்டனை கைதிகள் 650-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் புழல் ஜெயிலில் உயர்மட்ட பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் செல்போன் மூலம் பேசுவது, சிறைக்காவலர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 5ஆம் தேதி சிறைத்துறை விஜிலன்ஸ் டி.எஸ்.பி. லட்சுமணன் தலைமையில் போலீசார் புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.

இவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது உமர் பாரூக் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு ஒருவர் செல்போனை பிடுங்க முயன்றார்.
அவரை உமர்பாரூக், ராஜாஉசேன், சாகுல் அமீது ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புழல் போலீசில் விஜிலென்ஸ் டி.ஜி.பி. லட்சுமணன் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே 9 பேரும் சாப்பாடு கொடுக்க செல்லும் சிறைக்காவலர்களை ஆபாசமாக திட்டுவது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை தனித்தனி சிறைக்கு மாற்ற சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி உமர் பாரூக் சேலம் மத்திய சிறைக்கும், ராஜா உசேன் வேலூர் மத்திய சிறைக்கும், சாகுல் அமீது கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
இன்று காலை 7 மணியளவில் அவர்கள் 3 பேரும் தனித்தனி வேன்களில் ஏற்றப்பட்டு ஆயுதப்படை போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வேலூர், கடலூர், சேலம் ஜெயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications