ஆலந்தூர் இடைத் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி அறிவிப்பு
சென்னை: ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தற்போது ஆம் ஆத்மி கட்சி எழுத்தாளர் ஞாநியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் ஞாநி சங்கரன் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஞாநியின் பெயர் இடம்பெறவில்லை. தென் சென்னை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக ஞாநியை நிறுத்த ஆம் ஆத்மி கட்சியில் சிலர் முட்டுக்கட்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ஞாநியை ஆம் ஆத்மி கட்சி சென்னையில் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாநி கூறியுள்ளதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க, தி.மு.கவுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் வளரவேண்டும். அதற்கான விதையே ஆலந்தூரில் ஊன்றப்படுகிறது. மேற்படி நால்வரின் கூட்டணியை முறியடிக்கும் மக்கள் சக்தியாக ஆம் ஆத்மியை வளர்ப்பீர் ! வளர்ப்போம்! நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்! அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர். அனைவரும் தம் உழைப்பினை நல்கீர் !
இவ்வாறு ஞாநி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications