தமிழக வரலாற்றில் முதல் முறை: முதல்வரை விரட்டியடித்த கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூருக்குள் நுழைய முடியாமல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது திட்டத்தை மாற்றியுள்ளார். கிராமத்திற்குள் நுழைய முடியாமல் ஒரு முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் ஏற்கவில்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு திட்டமிட்டது.

Alanganallur people drives away CM: Sets a new example

இதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மதுரை சென்றனர். வம்படியாக ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு காளையை கூட தர மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

மேலும் முதல்வர் வராமல் இருக்க அலங்காநல்லூரை சுற்றி சாலைகளில் குழி தோண்டி போக்குவரத்தை பாதிக்கச் செய்துள்ளனர் மக்கள். இதையடுத்து முதல்வர் அலங்காநல்லூருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழக அரசின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

ஒரு கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும். ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளி ஓடும். அவற்றை நானே அவிழ்த்துவிடுவேன் என்று முதல்வர் தெரிவித்தது எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+