தமிழகத்தில் பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு : அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே தமிழக அரசின் கொள்கை என்று இன்று நடந்த எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மட்டும் அவையில் இருந்தனர்.

அப்போது, பேசிய அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கே அதிமுக அரசின் கொள்கை முடிவு. உடனடியாக ஒரே நேரத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதாலேயே படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் மின் தடை குறித்த தொலைபேசி அழைப்புப் புகார்கள் 90% நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன. நிதி நெருக்கடி இருப்பினும், இலவச மின்சேவை திட்டம் தொடர்ந்து வருகிறது.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊழியர்களுக்கு 600 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 2018ல் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications