தூத்துக்குடி- அமெரிக்க கப்பலில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்-35 பேர் கைது
தூத்துக்குடி: இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக தூத்துக்குடியில் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உட்பட 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 11ந் தேதி அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலை கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். கப்பல் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட ஆயுதங்கள் தாங்கிய கப்பல் அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் இதில் 26வகையான நவீனரக ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு மாவட்ட காவல்துறையிடம் இருந்து கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கப்பலில் உள்ள மாலுமிகள், பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கப்பலின் லாக் புக்கை விசாரணையின்போது தரமறுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் க்யூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை 1மணியளவில் கப்பலில் இருந்து 35 துப்பாக்கிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட தோட்டக்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8மணியளவில் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் கப்பலின் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர்கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கப்பல் பாதுகாவலர்கள், மாலுமிகள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 35பேரும் கைது செய்யப்பட்டாலும் 33 பேர் மட்டுமே காவல்நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இருவர் கப்பலின் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications