தூத்துக்குடி- அமெரிக்க கப்பலில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்-35 பேர் கைது
தூத்துக்குடி: இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக தூத்துக்குடியில் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உட்பட 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 11ந் தேதி அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலை கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். கப்பல் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட ஆயுதங்கள் தாங்கிய கப்பல் அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் இதில் 26வகையான நவீனரக ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு மாவட்ட காவல்துறையிடம் இருந்து கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கப்பலில் உள்ள மாலுமிகள், பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கப்பலின் லாக் புக்கை விசாரணையின்போது தரமறுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் க்யூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை 1மணியளவில் கப்பலில் இருந்து 35 துப்பாக்கிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட தோட்டக்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8மணியளவில் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் கப்பலின் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர்கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கப்பல் பாதுகாவலர்கள், மாலுமிகள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 35பேரும் கைது செய்யப்பட்டாலும் 33 பேர் மட்டுமே காவல்நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இருவர் கப்பலின் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications