உளுந்தூர்பேட்டையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு - கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் விஜயகாந்த்
விழுப்புரம்: தே.மு.தி.க.வின் ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு உளுந்தூர்பேட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் தே.மு.தி.க. மாநில மாநாடு இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக அங்கு தேமுதிக கட்சி கொடியை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் வழக்காடு மன்றம் நடைபெற்றது. மாநாட்டின் நுழைவு வாயில் செஞ்சி கோட்டை போன்றும், மேடைகள் சட்டசபை, லோக்சபை போலவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.,

இம் மாநாட்டிற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்ளுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.
இம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications