நேரம் சரியில்லை... ஜெ. இறந்து விட்டார்.. இந்திய மருத்துவ கவுன்சில் வினோத விளக்கம்!
ஜெயலலிதாவிற்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர்உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையும், எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையும் வெளியானது. இதனை மேற்கோள் காட்டி தமிழக அரசு நீண்ட விளக்கம் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களின் சிகிச்சை பற்றி விளக்கம் அளித்தனர். இப்போது இத்தனை விளக்கம் தருபவர்கள் ஒரு போட்டோவையோ? வீடியோவையோ வெளியிட்டார் சந்தேகம் தீர்ந்து விடும் என்பதே உண்மையான அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாகும்.

அரசியலாக்காதீர்கள்
இந்திய மருத்துவக்கவுன்சில் மாநிலத்தலைவர் ரவிசங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மருத்துவர்கள் மீது யாரும் குற்றம் சொல்ல வேண்டாம் என்றும் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

நேரம் சரியில்லை
ஒரு உயிரைக்காப்பற்றத்தான் நாங்கள் முயற்சி செய்வோம், மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உயிரைக்காக்கவும் 75 நாட்களாக போராடினோம். உலகத்தரத்துடன் கூடிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றாலும் அவர் உயிரிழந்து விட்டார். இது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று கூறினார்.

விளக்கம் தர மறுப்பு
யாரையும் பார்க்க விடாதது ஏன் என்பது பற்றியோ, சிசிடிவி கேமரா இல்லை என்பது பற்றியோ தங்களால் விளக்கம் தரமுடியாது என்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் விளக்கம் ஏன்?
அரசியல் பிரச்சினையில் மருத்துவர்களின் சிகிச்சையை குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா உயிரிழந்து 100 நாட்களை எட்ட உள்ள நிலையில் இன்னும் என்னென்ன விளக்கங்களை யார் யார் தரப்போகிறார்களோ?
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications