காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
காவிரி பிரச்சினை போராட்டங்களில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 3-ந் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 3-ந் தேதி மாநிலம் தழுவிய ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில், திருச்சியில் விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.
அதேபோல, தமிழக அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் செயல்படக் கூடாது.
தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற நிலை வருமளவுக்கு தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அய்யாக்கண்ணு தலைமை தாங்குகிறார். திருவாரூரில் நடைபெறும் போராட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் பங்கேற்கிறார். நாகையில் நடக்கும் போராட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பங்கேற்பார்கள். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications