நேற்று இரவு தொடங்கியது.. இன்னும் விடவில்லை.. தமிழகம் முழுக்க கொட்டித் தீர்க்கும் தீவிர கன மழை!
Recommended Video
சென்னை: நேற்று இரவில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தமிழகத்தில் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

எங்கு மழை
நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவானது. தஞ்சையில் அணைக்கட்டில் 10 செ.மீ. மழை பதிவானது. வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன.

எங்கு மழை
திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ. மழை பெய்தது. பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழைப்பதிவு. அங்கு தொடர்ந்து இப்போதும் மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலையில் எப்படி
தற்போது திருவண்ணாமலையில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரையில் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வேறு எங்கேல்லாம் மழை
அதேபோல் நேற்று இரவில் இருந்து சிதம்பரம், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர், நெல்லை, அரியலூர், காஞ்சிபுரம், கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications