ரொக்கமற்ற பரிவர்த்தனையை இதைவிட எப்படி விமர்சித்து விட முடியும்? ஆளூர் ஷாநவாஸ்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், ரொக்கமற்ற பரிவர்த்தனை குறித்து ஒரு பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பால் சாதாரண மக்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளனர். சாலையோர கடைகளில் உணவு அருந்தி விட்டு பணிக்குச் செல்பவர்கள் சில்லரை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
சிறிய வியாபாரிகளான காய்கறி விற்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடையே 'இது எதில் போய் முடியுமோ?' என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியாகி 40 நாட்களுக்கு மேலாகியும் பிரச்சினை தீர்ந்தபாடியில்லை. இதனிடையே பணமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இதுதொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ரொக்கமற்ற பரிவர்த்தனை எனும் பித்தலாட்டத்தை, இதைவிட எப்படி விமர்சித்து விட முடியும்?
அடடா! அருமை அருமை..
அடடா! அருமை அருமை..