For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை… தினகரனுக்கு ஓபிஎஸ் பதிலடி

அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போதும் இருப்பதால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    யார் கட்சி தொடங்குனாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஓ.பி.எஸ்

    சென்னை: தினகரன் தனிக்கட்சி தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போதும் இருப்பதால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

    காலையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓபிஎஸ், மாடுபிடி வீரர்களின் சாகசங்களை கண்டு ரசித்தார். இதனைத்தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

    Am not bothered about Dinakaran's New Party Announcement

    மதுசூதனன் கடிதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த கடிதம் தொடர்பாக மதுசூதனனிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அவரும் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தினகரன் தனிக்கட்சித் தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை என்றார். உண்மையான அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போது இருப்பார்கள் என்று கூறிய அவர், அதனால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என்றார்.

    English summary
    Am not bothered about Dinakarans New Party Announcement. After Returning from the Madurai he spoke this in Chennai Airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X